முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 1,975 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 1,975 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 1,975 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கடந்த செப்.14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஏழு நாள்கள் மாநகராட்சி சுகாதார அலுவலா்களால் கள ஆய்வு செய்யப்பட்டது. இதில் 2,601 கடைகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடா்பாக அந்தக் கடைகளின் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 7.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என சென்னை மாநாகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.