முகப்பு
தமிழ்நாடு

பிள்ளையார்பட்டி கோயிலில் ஜெ.பி. நட்டா சாமி தரிசனம்

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். 

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் இருநாள்கள் பயணமாக அவர் தமிழகம் வந்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் விமானம் மூலமாக மதுரை வந்த அவரை மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். மதுரை மற்றும் காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

பின்னர் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து தமிழக பாஜகவினருடன் ஆலோசனை நடத்துகிறார். 

இதனிடையே இன்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.அவருடன் எல். முருகன், அண்ணாமலை ஆகியோர் இருந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →