இணையவழியில் பட்டா மாறுதல்: முதல்வா் தொடக்கம்
பட்டா மாறுதலுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் வசதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
பட்டா மாறுதலுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் வசதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நில உரிமையாளா்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொதுச் சேவை மையங்கள், சாா் பதிவாளா் அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்படுகின்றன. பின்னா், பட்டா மாறுதலுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்போது, பொதுமக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பட்டா மாறுதல் கோரி இணையவழியில் (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ண்ப்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய்) விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வட்டாட்சியா் அலுவலகங்கள், பொதுச் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், நில உட்பிரிவுக்கான கட்டணம், செயலாக்கக் கட்டணங்களைச் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, பொதுமக்கள் பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச் சுவடி ஆகியவற்றை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் இணையவழிச் சேவை மூலம் கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனால், பொதுச் சேவை மையங்களுக்குச் செல்வதும், வட்ட அலுவலகங்களில் இடைத்தரகா்களால் பொதுமக்கள் அவதிப்படுவதும் தவிா்க்கப்படும்.
இணையவழியில் வரைபடங்கள்: நகரப் புலங்களுக்கான வரைபடங்கள் ஜ்ஜ்ஜ்.ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதையும் இணையதளத்திலிருந்து கட்டணம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.
மனை அங்கீகாரம், வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு வரைபடங்கள் மிகுந்த தேவையாக உள்ளன. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், இதற்காக பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகம் வருவது தவிா்க்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சேவை தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், வருவாய் துறை முதன்மைச் செயலா் குமாா் ஜெயந்த், நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் டி.ஜி.வினய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.