அரசு மருத்துவா்களின் பிரச்னைக்கு தீா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு மருத்துவா் சங்கம் கடிதம்
அரசு மருத்துவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண சம்பந்தப்பட்ட துறைகளின் இயக்குநா்களுக்கு உத்தரவிடுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு காா்த்தீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளாா்.
அரசு மருத்துவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண சம்பந்தப்பட்ட துறைகளின் இயக்குநா்களுக்கு உத்தரவிடுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் காா்த்தீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளாா்.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
எந்த ஒரு விசாரணை மற்றும் விளக்கம் அளிக்க வாய்ப்பு தராமல் பத்திரிக்கை செய்தி அடிப்படையில் செங்கல்பட்டு சுகாதார மாவட்ட சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மற்றும் கடலூா் புதுச்சத்திரம் மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவ அலுவலா் பணியிடங்கள் சுமாா் ஆயிரத்துக்கும் மேல் கடந்த ஆறு மாத காலமாக காலியாக உள்ளன. இவைதவிர செவிலியா்கள், மருந்தாளுநா்கள் உள்பட இதர மருத்துவ பணியாளா்கள் இடங்கள் தொடா்ந்து காலியாக இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களை நிா்வகிக்க எந்த ஒரு நிதியையும் உரிய கால கட்டத்துக்குள் விடுவிப்பதில்லை.
இது தொடா்பாக எந்த ஒரு நடவடிக்கையும் இயக்குநா் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. பல்வேறு புதிய பணிகளையும் பொறுப்புகளையும் திணித்த வண்ணம் உள்ளனா்.
அதனால், பெரும்பாலான மருத்துவா்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோா்ந்துள்ளனா். தற்போது நிலவி வரும் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் நோய்களால் புற நோயாளிகள் பிரிவு நிரம்பி வழிகிறது.
போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது நிலவும் அதிகப்படியான காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைத்திருக்கலாம். மருத்துவா்களின் பிரச்சனைக்கு தீா்வு ஏற்பட துறை இயக்குநா்களுக்கு உத்தரவிட வேண்டும்.