தமிழ்நாடு

மொழியால் இணைந்தோரை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

DIN

மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்ப் பரப்புரைக் கழகம் என்கிற திட்டத்தை சென்னையில் தொடக்கி வைத்து முதல்வர் பேசியதாவது, தமிழ் வெறும் மொழியல்ல, அது நம் உயிர், தமிழை தமிழே என்று அழைப்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இல்லை. அனைவருக்குமான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் ஆட்சி. அண்ணா பெயரால் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கப்படுவது பொருத்தமானது. 

24 மொழிகளில் தமிழ்ப் பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறைக்கு அடித்தளம் அமைத்தது திமுக அரசுதான். தமிழ் இணையக் கல்விக் கழகம் நம்முடைய அறிவுச் சொத்துக்களை பாதுகாக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. சென்னை அடையாறில் உள்ள டைடல் பார்க் திமுக அரசால் துவங்கப்பட்டது. உணர்வால், உள்ளத்தால், தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். 

மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது. தமிழை பாதுகாத்துவிட்டோம், இனி தமிழை பரப்ப வேண்டிய காலம். அதனால்தான் தமிழ்ப் பரப்புரைக் கழகம் துவக்கியுள்ளோம். கடந்த ஒரு வருடத்தில் தமிழுக்கு எத்தனையோ தொண்டுகளை திமுக செய்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் நடைபெற்று வருவது தேஜ கூட்டணி அரசுதான்: கூட்டணி குறித்த கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில்

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

SCROLL FOR NEXT