தமிழ்நாடு

விஷமான சாண்ட்விஜ்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவர்களுக்கு சிகிச்சை

DIN


ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனியார் பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பஜார் வீதி அருகே உள்ள தனியார் பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட சைமன்(10), ரூபன்(7), ஜான்சன்(9) ஆகிய மூவருக்கும் உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டைக்கு சொந்த வேலைக்காக சென்றுள்ளார். அப்போது பஜார் வீதியில் உள்ள தனியார் கேண்டீனில் தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது சாலமனும் அவரது மனைவி ரூபியும் தேநீர் சாப்பிட்ட நிலையில் சிறுவர்களான சைமன்(10), ரூபன்(7), மற்றும் ஜான்சன்(9) ஆகிய மூவரும் சாண்ட்விஜ் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்றதும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில  அனுமதித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதே காரணம் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போலீசார் உதவியோடு உணவகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உணவு தயார் செய்யும்  இடத்திலிருந்து நிறத்தை கூட்ட பயன்படும் இரசாயன நிறமிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடையிலிருந்த சாண்ட்வெஜ் மற்றும் இதர உணவு பொருட்களை சோதனைக்காக எடுத்துச் சென்றதோடு, உணவகத்தை தற்காலிகமாக பூட்டிவிட்டு சென்றனர். மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  பேக்கரி கடைகளில் மாவட்டம் முழுவதுமாக சோதனை நடைபெறும் என தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை தனியார் பேக்கரியில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT