தமிழ்நாடு

கல்லூரி மாணவி குளிக்கும்போது விடியோ எடுத்த இளைஞர்  கைது

கல்லூரி மாணவி குளிக்கும்போது விடியோ எடுத்த இளைஞரை கைது செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

DIN

சேலம்: கல்லூரி மாணவி குளிக்கும்போது விடியோ எடுத்த இளைஞரை கைது செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் நெத்திமேடு ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கொண்டலாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இந்த நிலையில் அன்னதானப்பட்டி கண்ணகி தெரு பகுதியைச் சேர்ந்த தேவாஸ் கூலித் தொழிலாளியான இவர், கல்லூரி மாணவி குளிக்கும் போது விடியோ எடுத்தத்கக கூறப்படுகிறது. இதனை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி பெற்றோர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 புகாரின் அடிப்படையில்   சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவி குளிக்கும்போது விடியோ எடுத்தது உறுதியானது. இதனையடுத்து தேவஸ் மீது போஸ்கோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT