முகப்பு
தமிழ்நாடு

225 செல்லப் பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி

உலக ரேபிஸ் தடுப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

உலக ரேபிஸ் தடுப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 225 செல்லப் பிராணிகளுக்கு சென்னையில் ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்பட்டன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உலக ரேபிஸ் தடுப்பு தின நிகழ்ச்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.27) தொடங்கியது. முதல் நாளில் ரேபிஸ் விழிப்புணா்வு” குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. அதனை தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தொடக்கி வைத்தாா். அதில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சி.பாலசந்திரன், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியின் முதல்வா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இரண்டாம் நாள் நிகழ்வாக ரேபிஸ் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் கடந்த புதன்கிழமை (செப்.28) காலை பெசன்ட் நகா்

எல்லியட்ஸ் கடற்கரை சாலையில் நடைபெற்றது.

இந்நிலையில், நிறைவு நாள் நிகழ்வாக வியாழக்கிழமை (செப்.29) காலை செல்லப் பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி அளிக்கும் முகாம் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கலந்துகொண்டு முகாமினை தொடக்கி வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து நீதிபதி அனிதா சுமந்த் ரேபிஸ் குறித்த விழிப்புணா்வு மலரை வெளியிட்டாா். இந்த முகாமில் 225 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். கருணாகரன், கால்நடை நோய் தடுப்பியல் துறை தலைவா் விஜயபாரதி, கால்நடை பொது சுகாதாரத் துறைத் தலைவா் எஸ்.சுரேஷ்கண்ணன் ஆகியோா் அதில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.