முகப்பு
தமிழ்நாடு

சசிகலா, தினகரனுடன் இணைந்து செயல்பட தயார்: ஓபிஎஸ்

சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Updated On : 18 ஆகஸ்ட், 2022 at 11:17 AM
பகிர்:

சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் சந்தித்த ஓபிஎஸ், மனக்கசப்புகளை மறந்து ஒன்றுபட்டு செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

Advertisement

அப்போது, யாராக இருந்தாலும் கட்சி விதிகளை ஏற்று செயல்பட்டால் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதில், சசிகலாவும், தினகரனும் அடங்குவர். அவர்கள் எங்களுடன் வரவேண்டும், நாங்கள் அவர்களுடன் செல்ல வேண்டும் என்பது இல்லை. அனைவரும் அதிமுகவில் இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.