சென்னையில் நாளை மநீம அவசர செயற்குழு கூட்டம்
சென்னையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் அவரச செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
சென்னையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் அவரச செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிவிப்பதற்காக கமல்ஹாசன் தலைமையிலான அவசர நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 18ம் தேதி (ஞாயிறு) மதியம் 12 மணி அளவில் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வில் அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.