முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 19,280 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2022 at 8:00 PM
கோப்புப்படம்
பகிர்:



தமிழ்நாட்டில் புதிதாக 19,280 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,22,105 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 19,280 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 25,056 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 13 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என மொத்தம் 20 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Advertisement

இதுவரை மொத்தம் 31,09,526 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,564 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி1,98,130 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

  • சென்னை - 2,897
  • கோவை - 2,456
  • செங்கல்பட்டு - 1,430
  • ஈரோடு - 1,070
  • சேலம் - 1,101
  • திருப்பூர் - 1,425

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.