முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் இன்று மறுகூராய்வு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று தனியார் பள்ளி மாணவியின் உடல் மறுகூராய்வு செய்கின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று தனியார் பள்ளி மாணவியின் உடல் மறுகூராய்வு செய்கின்றனர்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தடவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில் மறுகூராய்வு செய்கின்றனர். மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் மறுகூறாய்வு செய்கின்றனர்.

மறுகூராய்வு நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி சடலத்தை மறுகூராய்வு செய்யவும், அதை முழுவதுமாக விடியோ பதிவு செய்யவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற இளைஞா்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.

முழு கட்டுரையைப் படிக்க →