சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!
விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இன்று காலை ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணிபுரிந்து வந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.