முகப்பு
தமிழ்நாடு

12 மணி நேர வேலை: கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா நிறைவேற்றம்

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

இதற்கு காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

எனினும் கடும் எதிர்ப்புக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர், 'வாரத்தில் 48 மணி நேரம் பணி இருக்கும். நான்கு நாள்கள் 12 மணி நேரம் வேலை செய்தால் மற்றொரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும், ஒருவேளை கூடுதலாக வேலை செய்தால் கூடுதல் ஊதியம் வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்' என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →