தமிழ்நாடு

12 மணி நேர வேலை: கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா நிறைவேற்றம்

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

DIN

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

இதற்கு காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

எனினும் கடும் எதிர்ப்புக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர், 'வாரத்தில் 48 மணி நேரம் பணி இருக்கும். நான்கு நாள்கள் 12 மணி நேரம் வேலை செய்தால் மற்றொரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும், ஒருவேளை கூடுதலாக வேலை செய்தால் கூடுதல் ஊதியம் வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT