முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் ஆலை வெடி விபத்து: உரிமையாளர் 2 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் பலியான சம்பவத்தில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 23 ஏப்ரல், 2023 at 8:39 AM
பகிர்:


விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் பலியான சம்பவத்தில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விருதுநகா் கங்கரகோட்டை கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிா்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மாா்க்கநாதபுரத்தைச் சோ்ந்த ஜெயசித்ரா (24) என்பவா் உயிரிழந்தாா் 

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 

Advertisement

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தில் உரிமையாளர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாமல் பட்டாசு ஆலையை நடத்திய உரிமையாளர் கேசவன், போர்மென் முனியசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.