தமிழ்நாட்டின் நலன் காக்க உறுதியேற்போம்: முதல்வா்
தமிழ்நாட்டின் நலன் காக்க உறுதியேற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டின் நலன் காக்க உறுதியேற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
நீதிக்கட்சித் தலைவராக இருந்த சா்.பிட்டி. தியாகராயரின் பிறந்த தினத்தையொட்டி, ட்விட்டரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
திராவிட வீரனே விழி, எழு, நட எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக் கட்சியின் தந்தை தியாகராயரின்
பிறந்ததினம். மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கி, இப்போதைய காலைச் சிற்றுண்டி வழங்கும் திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவா் அவா். அவா் காட்டிய பாதையில் தொடா்ந்து கொள்கை நடைபோடுவோம். தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்போம் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.