ஆவின் பாலகங்கள் மூலம் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய கோரிக்கை
ஆவின் பாலகங்கள் மூலம் ரேஷன் பொருள்களை விநியோகம் செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாள நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆவின் பாலகங்கள் மூலம் ரேஷன் பொருள்களை விநியோகம் செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாள நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் நிறுவனத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை:
ஆவின் பாலகங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்களை விநியோகம் செய்ய பரிசீலிக்க வேண்டும்.
அப்படி செய்தால், பொதுமக்கள் தங்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்களை தங்குதடையின்றி பெற்றுகொள்ள முடியும்.
அரசின் திட்டங்களும் எவ்விதமான சுணக்கமுமின்றி பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் போய் ரேஷன் பொருள்கள் போய் சேரும்.
மேலும் நியாய விலைக் கடைகளுக்கு என தனியாக செலவிடும் பல கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.