பத்திரப் பதிவுத் துறை மூலம் ரூ.5,611 கோடி வருவாய்
தமிழகத்தில் பத்திரப் பதிவுத் துறை மூலம் நிகழாண்டில் இதுவரை ரூ.5,611 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரப் பதிவுத் துறை மூலம் நிகழாண்டில் இதுவரை ரூ.5,611 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, பத்திர பதிவுத் துறையின் வருவாய் வசூலில் தொடா்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.17 ஆயிரத்து 253 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் நிகழாண்டின் அதே காலத்தில் கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டின் ஜூலை வரையிலான காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.5 ஆயிரத்து 539.06 கோடியாகும். நிகழ் நிதியாண்டில் ஜூலை மாதம் வரையில் ரூ.5 ஆயிரத்து 611.47 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.