காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீஜெயேந்திரர் ஜெயந்தி உற்சவம்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 89வது ஜெயந்தி உற்சவம் வியாழக்கிழமை ஸ்ரீமடத்தில் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 89வது ஜெயந்தி உற்சவம் வியாழக்கிழமை ஸ்ரீமடத்தில் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-வது பீடாதிபதியாக இருந்து வந்தவர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது 89-வது ஜெயந்தி உற்சவத்தையொட்டி காலையில் 37 வேத விற்பன்னர்கள் அடங்கிய குழுவினரால் வேதபாராயணம் நடைபெற்றது. இதனையடுத்து ஏகாதச ருத்ர ஜெப ஹோமம் நடைபெற்று மடத்தில் உள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திரர் அதிஷ்டானங்களுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.
படிக்க: ஆடிப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றில் திரண்ட மக்கள்!
Advertisement
மடத்தில் உள்ள ஜெயேந்திரர் அதிஷ்டானம் தங்கக்கவசத்தாலும்,வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனையடுத்து மாதாந்திர அவிட்ட நட்சத்திர பூஜையும் நடைபெற்றன.