முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: முதல்வர் நாளை ஆலோசனை!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

DIN

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. 

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதல்கட்டமாக இதுவரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வியாழக்கிழமை இன்று (ஆக. 3) நடைபெற்ற முகாமில், 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இரண்டாம் கட்ட முகாம்கள் வரும் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT