தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: முதல்வர் நாளை ஆலோசனை!

DIN

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. 

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதல்கட்டமாக இதுவரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வியாழக்கிழமை இன்று (ஆக. 3) நடைபெற்ற முகாமில், 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இரண்டாம் கட்ட முகாம்கள் வரும் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT