அதிமுக உறுப்பினராக 2.44 கோடி பேர் விண்ணப்பம்!
ஆக.17ஆம் தேதி மாலை 5 மணிவரை உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான கெடு நீட்டிக்கப்படுகிறது.
அதிமுகவில் உறுப்பினராக இணைவதற்கு 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்கள் அதை புதுப்பித்துக்கொள்ள புதிய விண்ணப்பப்படிவங்கள் மே 4ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.
அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Advertisement
Advertisement
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதனைத் தொடர்ந்து வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிவரை உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான கெடு நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதியான வாய்ப்பாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.