முகப்பு
தமிழ்நாடு

ஆலப்பாக்கம் சண்முகம் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் கு. சண்முகம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு

ஆலப்பாக்கம் சண்முகம் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் கு. சண்முகம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:06 PM
பகிர்:

திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் கு. சண்முகம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சியின் 146-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு. சண்முகம் மாரடைப்பால் திங்கள்கிழமை காலை மரணமடைந்தார். இதையடுத்து திமுகவினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்,  'பெருநகரச் சென்னை மாகராட்சியின் 146-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான  ஆலப்பாக்கம் கு. சண்முகம் , இன்று (7-8-2023) கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்றிருந்த நிலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன். 

மதுரவாயல் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரரான அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →