கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு!
கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் என்று கோவை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் என்று கோவை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த சில நாள்களாக மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பல தலைமுறைகளுக்கு பயன்தரும் திட்டம்: மு.க. ஸ்டாலின்!
இந்நிலையில், தற்போது மழை இல்லாமல் நீர்வரத்து குறைந்த காரணத்தினால், நாளைமுதல்(ஆக.8) கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.