கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு(85) வயதுமூப்பு காரணமாக புதன்கிழமை காலை 8 மணியளவில் கோவை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு(85) வயதுமூப்பு காரணமாக புதன்கிழமை காலை 8 மணியளவில் கோவை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ. ராசு (85) வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என அறிந்து வருத்தமுற்றேன்.
இதையும் படிக்க | கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு காலமானார்
பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளைப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளாா்.