தமிழ்நாடு

டிபிஐ வளாகத்தில் க. அன்பழகன் சிலை திறப்பு! 

சென்னை டிபிஐ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர்  க. அன்பழகனின் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். 

DIN

சென்னை டிபிஐ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர்  க. அன்பழகனின் முழு உருவச் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) திறந்துவைத்தார். 

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும், அங்கு அவரது சிலை நிறுவப்படும், சிறந்த பள்ளிகளுக்கு அவரது பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். 

அதன்படி, டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று கடந்த டிசம்பரில் பெயர் சூட்டப்பட்டு நூற்றாண்டு வளாகமும் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க. அன்பழகனின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், க.அன்பழகனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!

அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!

பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக

முதல்முறையாக Space Needle கோபுரத்தில்பறந்த இந்திய தேசியக் கொடி! | US

பேசும் கருத்தில் எனக்கு முரண்பாடு! உன் தமிழில் எனக்கு உடன்பாடு” இல. கணேசன் குறித்து சீமான்!

SCROLL FOR NEXT