முகப்பு
தமிழ்நாடு

தக்காளி விலை குறைந்து ரூ.60க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி வெள்ளிக்கிழமை ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 11 ஆகஸ்ட் 2023, 9:11 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று (வெள்ளிக்கிழமை) ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்து வந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.210 வரை சிறிய கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாகவே தக்காளி விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. 

விலை உச்சத்தில் இருந்தபோது 20 முதல் 30 லாரிகளில் மட்டுமே சந்தைக்கு வந்தன. ஆனால் கடந்த சில நாள்களாக வரத்து அதிகரித்து வியாழக்கிழமை 40 லாரிகளில் தக்காளி விற்பனைக்காக வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ரூ.210 வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments