தமிழ்நாடு

சுதந்திர நாள் அணிவகுப்பு இறுதி ஒத்திகை!

DIN


சுதந்திர நாளையொட்டி சென்னை மெரினாவில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

76வது சுதந்திர நாளையொட்டி தமிழ்நாட்டில் ஒத்திகை நிகழ்ச்சிகள் கட்ந்த 4ஆம் தேதிமுதல் தொடங்கியது. மொத்தம் மூன்று நாள்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. 

ஏற்கெனவே ஆகஸ்ட் 4, 10 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (ஆக. 13) அணிவகுப்பு இறுதி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவல் படை உள்ளிட்ட 7 படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

ஒத்திகைக்காக ராஜாஜி சாலையிலும், காமராஜா் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்திகை நேரத்தில் நேப்பியா் பாலத்திலிருந்து போா் நினைவுச் சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT