முகப்பு
தமிழ்நாடு

ஆளுநருக்கு அதிகாரமே இல்லை: ப. சிதம்பரம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Updated On : 14 ஆகஸ்ட், 2023 at 6:57 PM
பகிர்:


புதுக்கோட்டை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ராயவரத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது,

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மாநில அரசின் சட்டமுன்வடிவு, ஆளுநரைத் தாண்டி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

இனி அந்த சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் தரும் அதிகாரம் ஆளுநரிடம் இல்லை. எனவே, தனக்கு  அதிகாரமே இல்லாத ஒன்றை, ஒப்புதல் தர மாட்டேன் என அவர் ஏன் கூறுகிறார் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.