சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை!
சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுசென்னை புறநகர் பகுதிகளில் கனமழை!
சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பிற்பகல் தொடங்கிய கனமழை, விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால், பூமி குளிர்ச்சியடைந்தது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், இன்று காலை முதல் மீண்டும் வெயில் கொளுத்தி வந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
அதன்படி, சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகின்றது.
மேற்கு திசை காற்றும், தென் மேற்கு திசை காற்றும் சந்தித்ததன் காரணமாகவே இந்த திடீர் கனமழை என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.