தமிழ்நாடு

நெல்லையில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 29 மாணவர்கள் காயம்!

நெல்லையில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்த்தில் 29 மாணவர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர்.

DIN

நெல்லையில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்த்தில் 29 மாணவர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 50-க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பயிற்சிக்கு 29 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் தனியார் இன்று மாலை பேருந்தில்  சென்றிருக்கின்றனர்.

அப்போது திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி பள்ளி அருகே சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சாலனி (9), மணிகண்டன்(11) உள்பட 29 பள்ளி மாணவர்கள், 5 ஆசிரியர்கள், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உள்பட 36 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய் கொலை: மகன் கைது

சத்தா்பூரில் மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு: விசாரணைக்கு குழு அமைத்தது தேசிய பசுமை தீா்ப்பாயம்

‘பொறுப்புடன் செயல்படுவோம்’ - அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி குறித்து ரஷியா

மேற்கு வங்கத்தில் தோ்தல் அலுவலா்களுக்கு எதிராக வன்முறை : உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணைய பதில் மனுவில் புகாா்

பழங்குடியினா், சீக்கியா்களுக்கு அவமரியாதை - காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT