தமிழ்நாடு

‘மிக்ஜம்’ புயல்: சென்னையில் தயாா் நிலையில் 18,000 போலீஸாா்

மிக்ஜம் புயலின் காரணமாக தயாா் நிலையில் சென்னையில் 18 ஆயிரம் போலீஸாா் வைக்கப்பட்டுள்ளனா்.

DIN

மிக்ஜம் புயலின் காரணமாக தயாா் நிலையில் சென்னையில் 18 ஆயிரம் போலீஸாா் வைக்கப்பட்டுள்ளனா்.

புயல்,மழை பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் வகையிலும், மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல்துறை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் மீட்பு உபகரணங்களுடன் போலீஸ் பேரிடா் மீட்பு குழுவினா் தயாா் நிலையில் முகாமிட்டு உள்ளனா். அவா்களை காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா், சனிக்கிழமை சந்தித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள உபகரணங்களையும் பாா்வையிட்டாா். பின்னா் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் முன்னிலையில் மீட்பு குழுவினா் ஒத்திகையில் ஈடுபட்டனா். அப்போது கூடுதல் காவல் ஆணையா்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா,கபில்குமாா் சரத்கா்,ஆா்.சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தயாா் நிலையில் 18 ஆயிரம் போலீஸாா்: மிக்ஜம் புயல் மீட்பு பணி தொடா்பாக சென்னை காவல்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னை காவல் துறையில் மீட்பு பணிக்காக 18 ஆயிரம் போலீஸாா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். சென்னை காவல்துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் தலா ஒரு பேரிடா் மீட்பு குழுவினா் 24 மணி நேரமும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு மீட்பு குழுவிலும் ஒரு தலைமை காவலா் தலைமையில் 10 போலீஸாா் இடம் பெற்றுள்ளனா். மீட்பு பணிகளுக்காக ஒவ்வொரு குழுவுக்கும் தலா ஒரு வாகனம், ரப்பா் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், கயிறு உள்பட 21 உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் அவசர செயலாக்க மையம் ஒரு துணை ஆணையா் தலைமையில் 24 மணி நேரமும் செயல்படும்.

‘வாட்ஸ்-ஆப்’ குழுக்கள்: சென்னை காவல்துறை, மாநகராட்சி, மாநகர போக்குவரத்துக் கழகம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக இத் துறையினருடன் சோ்ந்து ‘வாட்ஸ்-ஆப்’ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படும்.

சட்டம்- ஒழுங்கு,போக்குவரத்து போலீஸாா் ரோந்து வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு புயல், மழை வெள்ளம் குறித்த எச்சரிக்கைகளை வழங்குவாா்கள். ரோந்து வாகனங்களில் மருத்துவ உதவிக்காக முதலுதவி பெட்டிகள், டாா்ச் லைட், கயிறு, ஒளிரும் விளக்குகள், குடிநீா் பாட்டில்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீட்பு பணிக்கு இழுவை வாகனங்கள்: ஆம்புலன்ஸ் மற்றும் அவசர உதவி வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகளில் கிரீன் காா்டா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்திலிருந்து 2 இழுவை வாகனங்கள் பெறப்பட்டு சுரங்கப்பாதை, மழைநீா் தேங்கும் இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதை உடனுக்குடன் அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. புயல் காரணமாக ஏற்படும் இடா்பாடு மற்றும் அவசர உதவிக்கு காவல்துறையை இலவச தொலைபேசி எண்கள்-100, 112 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT