அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 
தமிழ்நாடு

நாளை தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்

நாளை தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளது.

DIN

நாளை தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளது.

வங்கக் கடல் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக தனியார் நிறுவனங்களுக்கு நாளை(டிச.3) விடுமுறை அளிப்பது தொடர்பாக இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் நலன்கருதி முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மிக்ஜாம் புயலால் கனமழையுடன், 60-70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT