முகப்பு
தமிழ்நாடு

கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகள் திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 5 டிசம்பர் 2023, 12:17 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை பூசாரி விளக்கேற்ற வந்தபோது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், மா்மநபா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை மாலை கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த சூலத்தால் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடுவது பதிவாகி இருந்தது.

இந்தப் பதிவுகளை கொண்டு வையம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments