கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகள் திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகள் திருட்டு
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை பூசாரி விளக்கேற்ற வந்தபோது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், மா்மநபா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை மாலை கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த சூலத்தால் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடுவது பதிவாகி இருந்தது.

இந்தப் பதிவுகளை கொண்டு வையம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com