கோப்புப்படம் 
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பரங்கிமலை மெட்ரோ நிலையத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் முன்புறம் உள்ள சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ரோகினி திரையரங்கள் அருகேயுள்ள நடை மேம்பாலம் மூலம் கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை அடையலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், அரும்பாக்கம் மெட்ரோ நிலையம் அருகே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அரும்பாக்கம் மெட்ரோ நிலையத்துக்கு செல்வதில் சிரமம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு எஸ்டேட்(Government Estate) மெட்ரோ நிலையத்தில், வாலாஜா சாலை அருகேயுள்ள நுழைவு மூடப்பட்டுள்ளதால், மற்ற நுழைவுகளைப் பயன்படுத்த பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... வரலாறு படைத்த மெஸ்ஸி!

கூர்விழி... தர்ஷா!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

SCROLL FOR NEXT