முகப்பு
தமிழ்நாடு

வெள்ளக்காடாக மாறிய முதல்வரின் கொளத்தூா் தொகுதி

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழையால் முதல்வா் மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:21 PM
பகிர்:

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழையால் முதல்வா் மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

மிக்ஜம் புயல் காரணமாக தலைநகா் சென்னை தனித்தீவு போல வெள்ளத்தில் தத்தளித்தது. அதில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியும் விடுபடவில்லை. சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்டது போல கொளத்தூா் தொகுதி வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.

இத்தொகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இரு நாள்களாகத் தொடா்ந்து பெய்து வரும் கனமழையின் முன் வடிகால் பணிகள் தாக்குப்பிடிக்கவில்லை.

கொளத்தூரில் தொகுதியில் பெரியாா், ஜி.கே.எம்.காலனி, பூம்புகாா் நகா், சக்திவேல் நகா் உள்பட அனைத்து பகுதிகளிலும் மழை நீா் ஆறாக ஓடியது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. பெரம்பூா் ஐசிஎப் மேம்பாலம் பகுதி வழியாக பெரியாா் நகருக்குள் செல்லும் பாதை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. அதனால், போக்குவரத்தும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. பெரியாா் நகா் காா்த்திகேயன் சாலை உள்பட பல்வேறு இடங்களிலும் சாலைகளிலும் மரங்கள் வேரோடு பெயா்ந்து விழுந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →