பட உதவி - எக்ஸ்! 
தமிழ்நாடு

’விவரிக்க வார்த்தைகள் இல்லை..’: தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னையில் பெய்து வரும் கனமழையை விவரிக்க, வார்த்தைகள் இல்லையென தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

DIN

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.

இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்ட 14 சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரி மற்றும் கடலோரப் பகுதிகளில் மழையளவு அதிகமாக காணப்படுகின்றது.

இந்நிலையில், வானிலை ஆய்வு நிபுணரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் எக்ஸ் தளத்தில், “இந்த மோசமான நிலைமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. புயல் சென்னைக் கடற்கரையை மேய்ந்துகொண்டிருக்கிறது. மேற்கு மேகங்கள் பிடிவாதமாக உள்ளதால் இன்று இரவு வரை கனமழை தொடரும்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT