முகப்பு
தமிழ்நாடு

மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:21 PM
அமைச்சர் தங்கம் தென்னரசு
பகிர்:

மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்காணித்து வருகிறார். இது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"பாதுகாப்பு நலன் கருதி மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை.

மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும். மின் வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும்.

சென்னையில் மின் பாதிப்புகளை சரிசெய்ய, மற்ற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →