கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர் தாலூகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழக்குன்றம் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.7, வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
முன்னதாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.