ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 6 ஆம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஹெத்தையம்மன் கோயில் திருவிழா நீலகிரி மாவட்டத்தில் வரும் டிச.27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையும் படிக்க: புயல் நிவாரணம்: வங்கிக் கணக்கில் தர வலியுறுத்தல்!
இவ்விழாவில் படுகா் இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்தும், பாரம்பரிய பாடலுக்கு நடனமாடியும் ஹெத்தை அம்மனை வழிபடுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.