தமிழ்நாடு

தேர்தலில் நிற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி

DIN

தஞ்சாவூர்: வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற 10 மாவட்டங்களிலுள்ள அமமுக சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

வருகிற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் போட்டியிட இருப்பதாக கூறுவது ஊக அடிப்படையிலான தகவல். நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது சரியான நடவடிக்கை அல்ல. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்னை.மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது என்றார் தினகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

வெளிநாட்டிலிருந்து வந்தவா் கைது

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

SCROLL FOR NEXT