நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், பல்வேறு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனையிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஊழியர் சார்பில் மருத்துவமனையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
எனினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதேபோன்று தொடர் கனமழை காரணமாக நெல்லையப்பர் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
பல்வேறு முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்குவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் ஒட்டப்பிடாரம் இணைப்புச் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.