வீடுகளில் புகுந்த வெள்ளநீர் 
தமிழ்நாடு

நெல்லையில் கனமழை: மருத்துவமனை, வீடுகளில் வெள்ளம்!

நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், பல்வேறு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

DIN

நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், பல்வேறு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

நெல்லை அரசு மருத்துவமனையிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஊழியர் சார்பில் மருத்துவமனையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

எனினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. 

அரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ள நீர்

இதேபோன்று தொடர் கனமழை காரணமாக நெல்லையப்பர் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். 

பல்வேறு முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்குவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளநீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் ஒட்டப்பிடாரம் இணைப்புச் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடந்த 10 மாதத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த 2,893 போ் மீது நடவடிக்கை

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

நண்பா்களைப் பாா்க்கச் சென்ற மருத்துவப் பிரதிநிதி உயரமான கட்டடத்திலிருந்து விழுந்து பலி!

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT