முகப்பு
தமிழ்நாடு

அமராவதி அணை: வெள்ள அபாய எச்சரிக்கை!

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றங்கரையோரத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், ஆற்றங்காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:28 PM
அமராவதி அணை (கோப்புப் படம்)
பகிர்:

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றங்கரையோரத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், ஆற்றங்காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணியளவில் 83.24 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு விநாடிக்கு 10,194 கன அடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது.  அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படும். எனவே அமராவதி ஆற்று கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.