தமிழ்நாடு

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தென்மாவட்டங்களில்  தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

DIN

தென்மாவட்டங்களில்  தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த ஆலோசனையில் ஆட்சியர்களுடன்,  தென்மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், ஆணையர்கள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக நெல்லை தாமிரவருணி ஆற்றில் ஒருலட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோன்று தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலை குறித்தும், மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கோவையில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொண்ட பிறகு, தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகரித்து வருவதை அறிந்து காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT