முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூா் ரயில்கள் டிச.31 வரை இயங்காது

திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:31 PM
கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையால் செய்துங்கநல்லூா் - ஸ்ரீ வைகுண்டம் இடையிலான தண்டவாளம் பலத்த சேதமடைந்தது. இதனை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே தினமும்இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் டிச.31-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூா் செல்லும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிச.31-ஆம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →