ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த சேலத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாளராக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலன்(26) என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதத்திற்கு மேலாக தொடர்ச்சியாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
படிக்க: தடம் மாறும் இளைய தலைமுறை!
இதில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் மன அழுத்தம் காரணமாக நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.