தமிழ்நாடு

வன்கொடுமை சட்டத்தில் கைதான ஊராட்சி மன்ற தலைவருக்கு நிபந்தனை பிணை!

வன்கொடுமை சட்டத்தில் கைதான ஊராட்சி மன்ற தலைவருக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது.

DIN

வன்கொடுமை சட்டத்தில் கைதான ஊராட்சி மன்ற தலைவருக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது.

சேலம் இரும்பாலை அருகேயுள்ள திருமலைகிரியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பிரவீன்குமார் என்ற இளைஞர் கோயிலில் சாமி தரிசனம் சென்றபோது மற்றொரு தரப்பினர் அவரை தடுத்து நிறுத்தி திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம், பிரவீன் குமாரை அவதூறாக பேசி, சாதி பெயரை சொல்லி திட்டியதாக கொடுக்கப் பட்ட புகாரின் பேரில் இரும்பாலை காவல் துறையினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து மாணிக்கம் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திற்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார்.  ஒரு மாதம் திருமலைகிரி பஞ்சாயத்து பகுதிக்குள் நுழையக் கூடாது. 

தினமும் காலையும் மாலையும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், இந்த நிபந்தனையை மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பால் நிறைய வேண்டும் அகிலம் : மு.க. ஸ்டாலின்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் டிரோன்கள்! ஒரே வாரத்தில் 3 வது முறை!

158 வகை உணவுகளுடன் மாப்பிளைக்கு தல பொங்கல் விருந்து!

அனுமன் சிலையை 4 மணிநேரம் சுற்றிவந்து வழிபட்ட நாய்!

பல்கலை. இடையிலான பேட்மிண்டன் போட்டிகள்! தொடக்கி வைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT