தமிழ்நாடு

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் அங்கி அணிவது கட்டாயமில்லை

வழக்குகளில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், அவர்களுக்கான அங்கியை அணிய வேண்டுமென்ற தேசிய கம்பெனி சட்ட வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


சென்னை: வழக்குகளில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், அவர்களுக்கான அங்கியை அணிய வேண்டுமென்ற தேசிய கம்பெனி சட்ட வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், கட்டாயமாக வழக்குரைஞர்களுக்கான அங்கியை அணிய வேண்டும் என 14.11.2017}இல் தேசிய கம்பெனி சட்ட வாரிய பதிவாளர் உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.ராஜேஷ்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017} இல் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேசிய கம்பெனி சட்ட வாரிய விதிகளில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க எவ்வித அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், வழக்குரைஞர் அங்கி அணிய வேண்டுமென்று உத்தரவிட முடியாது எனவும், உச்ச நீதிமன்றம்,  உயர் நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்கள் மற்றும்  தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், அங்கி அணிவது கட்டாயமில்லை எனத் தெரிவித்தனர். 

மேலும், இது போன்ற விதிகளை வகுக்க உயர் நீதிமன்றத்துக்குதான் அதிகாரம் உள்ளது எனக் கூறி, 2017-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

முன்னதாக தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்குரைஞர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டை பொருத்தவரை இந்திய பார் கவுன்சில் விதிகள் பொருந்தும் என தேசிய கம்பெனி சட்ட வாரியம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சள் மோகினி... டெல்னா டேவிஸ்!

ஓவியம்... பிரியங்கா சௌத்ரி!

பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

கம்பீரா பால விபத்து: 27 நாள்களாக அந்தரத்தில் தொங்கிய லாரி பாதுகாப்பாக மீட்பு!

Uttarakhand வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்! பதைபதைக்கும் காணொலி!

SCROLL FOR NEXT