முகப்பு
தமிழ்நாடு

பரமத்திவேலூர்: சிறுத்தைப் புலியைப் பிடிக்க அமைச்சர் தலைமையில் ஆலோசனை

பரமத்திவேலூரில் சுற்றித் திரியும் சிறுத்தைப் புலி: அமைச்சர், ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:28 AM
பகிர்:

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலை சுற்றுப்பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தைப் புலியை பிடிப்பது தொடர்பாக, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை புலியை பிடிக்க முதுமலை, ஆனைமலை, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற குழுக்களும், முதுமலை பகுதியிலிருந்து வனவிலங்கு நடவடிக்கை அறிந்த மாலைவாழ் பகுதியைச் சேர்ந்தவர்களும் மற்றும் வனஉயரடுக்கு படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளது.

விரைவில் சிறுத்தைப் புலி பிடிக்கப்படும். சிறுத்தைப் புலியைப் பிடிக்க கூண்டுகளை அதிகப்படுத்தவும், கண்காணிப்பு கேமராக்கள் அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில், வனவிலங்கு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வனத் துறையினர் கலந்து கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →