தமிழ்நாடு

கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல்: 7 பேர் காயம்

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கொள்ளையர்கள் தாக்கி

DIN

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கொள்ளையர்கள் தாக்கி, அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த நாகை மீனவர்கள் 7 பேர் மறுத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர்கள் சந்தூரு, மகேஷ், அகாஷ், சிவபாலன், முருகவேல், சூரியா, முருகன் ஆகிய  7 மீனவர்களும், முருகன் என்பவருக்கு சொந்தமான படகில் 15 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

புதன்கிழமை இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 10 பேர் கத்தி, கட்டையுடன் மீன்வர்களை தாக்கியுள்ளனர். இதில், படகு உரிமையாளர் முருகனுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. 

மீனவர்களிடம் இருந்த திசைகாட்டும் கருவி, வாக்கிடாக்கி போன்றவைகளை பறித்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT